×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனி எல்லாத்தையும் விட்டுடுறேன்.. மகள்களுக்காக திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்.! பாஜகவில் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவி பரபரப்பு கோரிக்கை.!

வடசென்னையைச் சேர்ந்த ரவுடிகளில் ஒருவருமான கல்வெட்டு ரவி பா.ஜ.க.வில் இணைந்து பெரும் பரபரப்

Advertisement

வடசென்னையைச் சேர்ந்த ரவுடிகளில் ஒருவருமான கல்வெட்டு ரவி, பா.ஜ.க.வில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று சென்னை சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அங்கு கமிஷனர் லோகநாதனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த மனுவில், நான் சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களை நல்ல படியாக பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். எனது மகள்களின் எதிர்காலத்திற்காக வாழ விரும்புகிறேன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நான் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும்படியாகி விட்டது. இனி திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். 

என் மீதுள்ள வழக்குகளை ஆஜராகி நீதிமன்றத்தில் விடுதலை பெற்று கொள்கிறேன். எனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் குற்றச்செயலில் ஈடுபட்டால், அதுபற்றி தீர விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். திருந்தி வாழ எனக்கு வாய்ப்பு தரவேண்டும். இவ்வாறு கல்வெட்டு ரவி தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டு ரவி மீது கொலை முயற்சி வழக்குகள் உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 6 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kalvettu ravi #commissionor office
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story