×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உளுந்தூர்பேட்டை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி; கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி.!

உளுந்தூர்பேட்டை: மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு அஞ்சலி; கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி.!

Advertisement


தேமுதிக நிறுவனர் & தலைவரும், தமிழ் நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், பல திரையுலக நட்சத்திரங்களுக்கு அறிமுகம் கொடுத்து, ஏழைகளில் வாழ்க்கையில் எம்.ஜி.ஆருக்கு பின் வாழ்க்கையில் விளக்கேற்றிய நாயகனாகவும் இருந்து வந்தவர் விஜயகாந்த். 

துணிச்சலான பேச்சு, கம்பீரமான குரல், மக்களுக்காக அரசியல் பயணத்தை தொடங்கி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் வரை பதவியில் அமர்ந்த விஜயகாந்த், தன்னை நம்பிய திரைத்துறை மற்றும் பொதுமக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். 

இவரின் மறைவு இன்று தமிழகத்தையே சோகத்திற்கு உள்ளாகியிருக்கும் வேலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விஜயகாந்தின் மறைவை அறிந்த பலரும், தங்களின் ஊர்களில் பொதுஇடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை நகரிலும், அனைத்து கட்சியினர் சார்பில் விஜயகாந்தின் புகைப்படத்தை கையில் வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. 

பலரும் விஜயகாந்தின் திருவுருவ படம் முன்பு தங்களின் அஞ்சலியை செலுத்தினர். அச்சமயம் அங்கு வந்த மூதாட்டி ஒருவர், விஜயகாந்த் மறைந்த செய்தியை கேட்டு, அவரின் திருவுருவ படம் முன்பு தனது அஞ்சலியை செலுத்தினார். மேலும், அவர் உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டு அழுதார். 

நன்றி: DX Ajith Siva 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kallakurichi #tamilnadu #vijayakanth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story