×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் தகராறில் கணவன் கொலை.. மனைவி ரகசிய காதலனுடன் பரபரப்பு சம்பவம்.. நடந்த பயங்கரம்.!

கள்ளக்காதல் தகராறில் கணவன் கொலை.. மனைவி ரகசிய காதலனுடன் பரபரப்பு சம்பவம்.. நடந்த பயங்கரம்.!

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சையின் போது கிடைத்த நட்பு கள்ளக்காதலாக, இறுதியில் மனைவி கம்பி என்னும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை செம்மனந்தூர் பகுதியைச் சார்ந்தவர் சந்தோஷ்குமார். இவரின் மனைவி வசந்தகுமாரி. இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக உடல்நல குறைவால் அவதிப்பட்ட வசந்தகுமாரி சேலம் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .அப்போது, அங்கிருந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். 

மேலும், அவர் வசந்தகுமாரின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினன் மதியத்தில் இருந்து சந்தோஷ்குமார் மாயமான நிலையில், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

விசாரணையின் போதே, கெடிலம் ஆற்றில் சடலம் எரிந்து நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது சந்தோஷ் குமார் உடல் என்பது உறுதியானது. 

தொடர் விசாரணையில், சந்தோஷின் மனைவி வசந்தகுமாரியின் மீது சந்தேகம் ஏற்பட, இறுதியில் கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்தது அம்பலமானது. இதனையடுத்து, காவல் துறையினர் வசந்தகுமாரி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kallakurichi #Ulunthurpet #Affair #Wife #Innocent #Husband #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story