தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம்... மணமகனின் தாயாரை தர தரவென இழுத்து... அதிர்ச்சி சம்பவம்.!

காதல் திருமணம்... மணமகனின் தாயாரை தர தரவென இழுத்து... அதிர்ச்சி சம்பவம்.!

kallakurichi-love-marriage-goom-mother-was-attacked-by Advertisement

கள்ளக்குறிச்சி அருகே காதல் திருமணம் செய்ததால் மணமகனின் தாயார் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள எஸ் கொளத்தூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சூர்யா. இவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு சென்னையில்  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவும் அதே கிராமத்தைச் சார்ந்த வேற்று சமூக பெண் ஒருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக  காதலித்து வந்தனர். இன்னடையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

tamilnadu

இந்த திருமணத்தில் விருப்பமில்லாத பெண் வீட்டார் மற்றும் அவரது உறவினர்களும்  சூர்யாவின் வீட்டிற்கு சென்று அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளனர். வீட்டில்  தனியாக இருந்த சூர்யாவின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டியும் அவர் சார்ந்த சமூகத்தை இழிவாக பேசியும் வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மற்றும் அவரது உறவினர்கள்  சூர்யாவின் தாயாரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து  கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில்  சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Kallakurichi #lovemarriag #groommotherattacked #massviolaenceagainstwoman
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story