இளமையில் வரக்கூடாத வறுமை!! வேலை இல்லாத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
வேலை இல்லாத விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏ
வேலை இல்லாத விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). கார் ஓட்டுநராக வேலை பார்த்துவந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் விக்னேஷுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் தவித்துவந்த அவர் மிகுந்த மனவேதனையில் இருந்துவந்துள்ளர்.
அதுமட்டும் இல்லாமல், குடி பழக்கத்திற்கும் அடிமையான விக்னேஷ், நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டின் அருகே மயங்கி கிடந்துள்ளார். விக்னேஷ் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வேலை இல்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362