×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலைக்கு வந்த இடத்தில் சிறுமியிடம் வேலையை காட்டிய வடமாநில இளைஞர்கள்.. அடங்கமறுத்து, அத்துமீறி பயங்கரம்..!

வேலைக்கு வந்த இடத்தில் சிறுமியிடம் வேலையை காட்டிய வடமாநில இளைஞர்கள்,..போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

Advertisement

சென்னையைச் சேர்ந்தவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவரது அண்ணன் பெரம்பலூர் அருமடல் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு  முடிந்து விடுமுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியின் அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியிடம் தங்களது குழந்தையை பார்த்துகொள்ள சொல்லி சென்றனர்.வீட்டில் தனியாக இருந்த சிறுமி அண்ணனின் குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அருமடல் பிரிவு ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் தாகு பாணி பகுதியைச் சேர்ந்த சுனில் ராம் (20), பிலிங் ப்ரா பகுதியை சேர்ந்த காமேஸ்வர் சிங் (19), தபானி பகுதியைச் சேர்ந்த பெகு நாகசியா (20) ஆகிய மூவரும் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

உடனே சிறுமி சத்தம் போட்டுள்ளார். சத்தம் போட்டதும் மூவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர் விட்டனர். இரவு வேலையை முடித்துவிட்டு வந்த அண்ணனிடம் சிறுமி நடந்தவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் ஆத்திரம் அடைந்து வடமாநில இளைஞர்கள் மூவரையும் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.

இதை பார்த்த அங்கிருந்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதற்கிடையில்  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு என்பதால் காவல்துறையினர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எனவே   வழக்கு பதிவு செய்து வடமாநில இளைஞர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #Jharkhand #14 year old Girl #chennai #Pocso Act #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story