×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென்று மயங்கி விழுந்த நபர்... உடற்பயிற்சியின் போது நகை கடை அதிபருக்கு நேர்ந்த சோகம்... காவல்துறை விசாரணை.!

திடீரென்று மயங்கி விழுந்த நபர்... உடற்பயிற்சியின் போது நகை கடை அதிபருக்கு நேர்ந்த சோகம்... காவல்துறை விசாரணை.!

Advertisement

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மயங்கி விழுந்து கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில்  நகைக் கடை வைத்து தொழில் செய்து வந்தார் அதற்காக  மார்த்தாண்டத்திலேயே வீடு எடுத்து தங்கி இருந்தார்.

 உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்ட அஸ்வின் நேற்று மாலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக சென்று இருக்கிறார். அப்போது உடற்பயிற்சியில் ஈடுபூட்டி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்  அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு அஸ்வினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அஸ்வினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அஸ்வினின் பெற்றோருக்கும்  தகவல் தெரிவித்தனர். அஸ்வினின் திடீர் மரணம் குறித்து  காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #kanyakumari #jewelery shop owner #ded #gym
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story