மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐடி இன்ஜினியர்... நடந்தது என்ன.?காவல்துறை விசாரணை.!
மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐடி இன்ஜினியர்... நடந்தது என்ன.?காவல்துறை விசாரணை.!

சென்னையை அடுத்த தாழம்பூரில் ஐடி நிறுவன ஊழியர் தனது மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் அரவிந்த்(35). இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணமாகி சுஜிதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா என்ற ஏழு வயது மகளும் இருந்தனர். குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் மனைவி சுஜிதா வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.