தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இ-பாஸ் கட்டாயம்.! இ-பாஸ் உடன் வந்தாலும் காய்ச்சல் பரிசோதனை.! செக்போஸ்ட்டில் தீவிர கண்காணிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட

Intensive monitoring at the valparai  checkpost Advertisement

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா எல்லைகளில் சமீப காலமாகவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு சமீபத்தில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில், வால்பாறை சோலையார் அணை சோதனைச்சாவடியில் கேரள பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்பதாலும், தேர்தல் நடத்தை வாகன சோதனை கட்டாயம் என்பதாலும் தீவிர வாகன சோதனை மற்றும் கொரோனா கண்காணிப்பு நடந்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்காக இ-பாஸ் கட்டயாம் என்பதால் வால்பாறை அடுத்த சோலையார் அணையில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இ-பாஸ் உடன் வந்தாலும் அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை பிறகே அனுப்பி வைக்கபடுகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story