×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளிமாநிலத்தில் இருந்து வரும் இவர்களுக்கு மட்டும் உடனடி இ பாஸ்! குவாரண்டைன் கிடையாது!

Instant e-pass for business oriented visitors from other states

Advertisement

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் கொரோனா பரவல் விடாது அதிகரித்து வந்தது. இந்தநிலையில் சில தளர்வுகளுடன் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இபாஸ் நடைமுறை இன்னும் தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் இபாஸ் நடைமுறையில் அவ்வப்போது சில தளர்வுகளை அளித்து வருகிறது. சமீபத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

அதாவது, வெளி மாநிலங்களில் இருந்து வணிக நோக்கில் வருபவர்கள் 72 மணி நேரம் மட்டும் (3நாட்கள்) தங்குவதாக இருந்தால் இ பாஸ் வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற் துறையினர் தவிர விருந்தோம்பல், தகவல் தொழில் நுட்பம், பொழுதுபோக்கு, சட்டம் சார்ந்த துறையினருக்கும் இச்சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#e pass #Other state
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story