×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் மோகம்.. உள்ளாசமாக இருந்துவிட்டு கலட்டிவிட்ட காதலன்.. கண்ணீரில் இளம்பெண்.!

காதல் மோகம்.. உள்ளாசமாக இருந்துவிட்டு கலட்டிவிட்ட காதலன்.. கண்ணீரில் இளம்பெண்.!

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகிலுள்ள கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவர் என்று சொல்லப்படுகிறது.

வெம்பாக்கம் அடுத்த வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமரேசன் சென்னையில் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசனும் அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குமரேசன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பல ஆசை வார்தைகளை சொல்லி நம்ப வைதுள்ளதுள்ளர். மேலும் இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்க வைத்து பல முறை உல்லாசம் அனுபவித்துள்ளார். 

இதனால் அந்த இளம்பெண் குமரேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் குமரேசன் அந்த இளம்பெண்ணை கலட்டிவிடும் நோக்கில் நடந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி இனி என்னுடன் பேச முயற்சிக்காதே என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண் பல முறை தொலைபேசியில் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவருடன் பேச முடியவில்லை. மேலும் குமரேசன் எங்கு இருக்கிறார் என்ற தகவலையும் அந்த பெண்ணால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து தான் எமற்றபட்டதை தாங்கமுடியாமல் அந்த இளம்பெண் சம்பவம் குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குமரேசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cheating #Abscond #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story