தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Indian IMD Announce Heat Wave Advertisement

 

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசும். இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அடுத்து ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால், மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பகல் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே 2ம் தேதி வரையில் அதிக வெப்ப அழகான ஆரஞ்சு எச்சரிக்கை தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்படுகிறது. 

ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசும். இதனால் இம்மாநிலங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#weather update #Heat Wave Alert #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story