மக்களை விரட்டி-விரட்டி தாக்கிய வடமாநில இளைஞர்கள்? பல்லடத்தில் பயங்கரம்.!
மக்களை விரட்டி-விரட்டி தாக்கிய வடமாநில இளைஞர்கள்; பல்லடத்தில் பயங்கரம்.!

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில், வடமாநிலத்தவர்கள் ஏராளமாக வேலை செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள பண்ணைகளிலும் வெளிமாநில நபர்கள் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில், வடமாநில இளைஞர்கள் கடைக்குள் புகுந்து பொதுமக்களையும் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: எங்கே செல்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூரில் கணவன் கண்முன் பலாத்காரம்.. அன்புமணி ஆவேசம்.!
பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியில், சிக்கன் கடைக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில், கையில் கட்டையுடன் துரத்தி, துரத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 5 பேர் கொண்ட கும்பல், போதையில் இவ்வாறான செயலை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: கணவன் கண்முன் மனைவி கத்திமுனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்.!