தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த 28 வயது இளம்பெண்; 2 கள்ளக்காதலர்களின் வற்புறுத்தலால் கதறக்கதற சோகம்.!

உல்லாசத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த 28 வயது இளம்பெண்; 2 கள்ளக்காதலர்களின் வற்புறுத்தலால் கதறக்கதற சோகம்.!

  in Tirupattur Woman Dies after Engaging Forced Sexual Activity with Boy Friend  Advertisement

டேய் இன்னைக்கி வேண்டாம் ப்ளீஸ் என கெஞ்சி கேட்ட கள்ளக்காதலியின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் கள்ளக்காதலர்கள் அத்துமீறியதால் பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியில் வசித்து வந்த திருமணமான 28 வயது இளம்பெண், கடந்த டிசம்பர் 11ம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் கணவர் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருவதால், மாதம் ஒருமுறையே வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் பெண்ணை கொலை செய்தது யார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

பலவந்தப்படுத்தி உல்லாசம்

அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் சிங்கப்பூர் சென்று வந்த குமரேசன் (வயது 26), விக்னேஷ் (வயது 25) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் பெண்ணின் கள்ளகாதலர்களாக இருந்து வந்ததும், சம்பவத்தன்று உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை வெவ்வேறு தருணத்தில் பலவந்தப்படுத்தி உடலுறவு மேற்கொண்டதால், மூச்சுத்திணறி பெண் மரணித்து தெரியவந்தது.

இதையும் படிங்க: கள்ளக்காதலனை கழுத்தறுத்து கொன்று தலைமறைவான கள்ளக்காதலி; ஆசையாக சென்றவருக்கு அதிர்ச்சி சம்பவம்.!

அதாவது, கடந்த 7 ஆண்டுகளாக குமரேசன் - பலியான இளம்பெண் இடையே உறவு இருந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட, விக்னேசுடன் பெண் பழகி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து வந்த குமரேசனுக்கு, விக்னேஷ் விவகாரம் தெரியவந்தது. 

illegal affair

கள்ளக்காதலர்கள் செயல்

சம்பவத்தன்று இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டிற்கு சென்ற குமரேசன் உல்லாசத்திற்கு அழைப்பு விடுத்தபோது, மறுப்பு தெரிவிக்கப்பட்ட காரணத்தால் பெண்ணை சரமாரியாக தாக்கி, கட்டாயப்படுத்தி ஆசையை தீர்த்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. குமரேசன் வெளியே சென்ற சில மணித்துளியில், விக்னேஷும் பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். 

ஏற்கனவே பெண் உடல்நலக்குறைவுடன் இருந்ததால் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த விக்னேஷ் பெண்ணை தாக்கி கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொண்டுள்ளார். இதனால் மூச்சுத்திணறிய பெண் சில நிமிடங்களில் உயிரிழந்தார். பெண் உயிரிழந்ததை அறிந்த இருவரும் தலைமறைவாக, விசாரணை நடத்திய அதிகாரிகள் விக்னேஷ், குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மருமகளின் உல்லாச லீலைகள்.. மாமியார் செய்த செயல்.. பின் நடந்தேறிய விபரீதம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Tirupattur Woman Dies #திருப்பத்தூர் #கள்ளக்காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story