காப்பாத்துங்க, நெஞ்சு வலிக்கிது.. தரையில் உருண்டு காங்கிரஸ் மேயர் கதறல்.. திமுக கவுன்சிலர்கள் கொந்தளிப்பு.!
காப்பாத்துங்க, நெஞ்சு வலிக்கிது.. தரையில் உருண்டு காங்கிரஸ் மேயர் கதறல்.. திமுக கவுன்சிலர்கள் கொந்தளிப்பு.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சரவணனை நோக்கி, 50 தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தவறி விழுந்து கதறல்
இதற்கு பதில் சொல்ல மறுத்த சரவணன், அங்கிருந்து புறப்பட்டு செல்ல முற்பட்டார். அப்போது, திமுக கவுன்சிலர் ஒருவர், வாசலில் அமர்ந்துகொண்டு சரவணன் மேற்படி செல்ல இயலாமல் தடுத்தார். அச்சமயம் மேயர் தவறி விழுந்தார்.
இதையும் படிங்க: பிணமாக மிதந்த பிஞ்சு.. கதறி துடிக்கும் தாய்.. பெற்றோர்களே கவனம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
கீழே விழுந்ததும் ஐயோ எனக்கு நெஞ்சு வலிக்கிறது, காப்பாத்துங்க, என்னை கொல்ல பார்க்குறாங்க, காப்பாத்துங்க என கீழே விழுந்து கதறினார். இதனைக்கேட்ட திமுக நிர்வாகிகள் கூட்டமே முடியவில்லை, நெஞ்சு வலிக்கிதா? நாங்களும் நடிக்கட்டுமா? என கேள்வி எழுப்பினர்.
வீடியோ நன்றிpolimernews
இதையும் படிங்க: நடுரோட்டில் துள்ளதுடிக்க நடந்த படுகொலை; நேரில் பார்த்து பதறியோடிய மக்கள் கூட்டம்.. 3 பேர் கும்பல் பகீர் செயல்.!