×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: பிணையில் வந்த ரௌடியை எமலோகம் அனுப்பிய பயங்கரம்.. கும்பகோணம் ரௌடி காளிதாஸ் வெட்டிக்கொலை..!

#JustIN: பிணையில் வந்த ரௌடியை எமலோகம் அனுப்பிய பயங்கரம்.. கும்பகோணம் ரௌடி காளிதாஸ் வெட்டிக்கொலை..!

Advertisement

 

பிணையில் சிறையில் இருந்து விடுதலையான ரவுடி கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவலஞ்சுழி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவை உள்ளூரில் ரௌடியாக வலம்வருகிறார். 

இதையும் படிங்க: தஞ்சாவூர்: "எம்புள்ள நிச்சயத்தை நடத்திப்பார்க்க பணம் இல்லையே" - விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை.!

இந்நிலையில், இன்று சுவாமிமலை பகுதியில் இருந்த காளிதாஸ், மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட காளிதாசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

படுகொலை சம்பவம்

இவர் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இன்று சுவாமிமலை பகுதியில் இருந்தவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளிதாஸ் தனது வீட்டு வாசலிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் சகோதரரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி.. 10 ஆண்டு ஸ்கெட்.. காத்திருந்து பகைதீர்க்க கொலை.. ரௌடி குறுந்தையன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #tamilnadu #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story