தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொலைக்கு வித்திட்ட மதுவிருந்து; மணமகன் பார்ட்டி மர்டரில் முடிவு.. தென்காசியில் பயங்கரம்.!

கொலைக்கு வித்திட்ட மதுவிருந்து; மணமகன் பார்ட்டி மர்டரில் முடிவு.. தென்காசியில் பயங்கரம்.!

in Tenkasi Youth Killed Over Marriage Liquor Drinking Bachelor Party  Advertisement

 

திருமணத்தை முன்னிட்டு நடந்த மதுவிருந்து கொலைக்கு வித்திட்ட துயரம் தென்காசியில் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், காசி மேஜர்புரம் பகுதியில் வசித்து வருபவர் சூர்யா. இவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறவிருந்தது. இதனை முன்னிட்டு சூர்யா தனது நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்ததாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!

சரமாரி வெட்டு

அச்சமயம், மதுபானம் அருந்த வந்திருந்த முனியா கணேசன், பட்டமுத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது வாய்தகராறாக உண்டாகி, ஒருகட்டத்தில் கைகலப்பு சம்பவம் அடைந்துள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளை எடுத்து வந்து பட்டமுத்துவை சரமாரியாக வெட்டினார்.

Tenkasi

ஒருவர் பலி., தடுக்க வந்தவர் படுகாயம்

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பட்டமுத்து பரிதாபமாக நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்தார். தாக்குதல் சம்பவத்தை தடுக்க வந்த பட்டமுத்துவின் நண்பர் அருண் குமாருக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பட்டமுத்துவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அருண் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி, 6 வயது மகள் கழுத்தறுத்துக் கொலை., கணவன் நடத்திய படுபயங்கரம்.. அதிர்ந்துபோன கரூர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tenkasi #marriage #Murder #Crime #தென்காசி #மதுவிருந்து கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story