×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்து தகராறில், தாய் மாமனை; சம்மட்டியால் அடித்து கொலை செய்த அக்கா மகன்...!!

சொத்து தகராறில், தாய் மாமனை; சம்மட்டியால் அடித்து கொலை செய்த அக்கா மகன்...!!

Advertisement

ஐ.டி. நிறுவன ஊழியரை சொத்து தகராறில் சம்பட்டியால் அடித்துக்கொன்ற உறவினரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (32). இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார். 

இந்நிலையில், பாண்டியனுக்கும், அவரது சகோதரி அய்யம்மாளுக்கும், சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில், வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும், அய்யம்மாளின் மகன் சக்திவேல் சொத்தை பிரித்து தரக்கோரி, பாண்டியன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று ராஜபாண்டி வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள், சொத்து விவகாரம் தொடர்பாக அவரிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது ராஜபாண்டியை, சரமாரியாக தாக்கி சம்பட்டியால் அவரது தலையில் பலமாக அடித்துள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலிறிந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Dindigul #Property Disputes #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story