இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ பணியாளருக்கு நேர்ந்த சோகம்; லாரியில் மோதி பலி.!
இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவ பணியாளருக்கு நேர்ந்த சோகம்; லாரியில் மோதி பலி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எம்.சி பள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 42). இவர் அரசு பொது சுகாதார பிரிவில், மருத்துவ களப்பணியாளராக இருக்கிறார்.
கடந்த பிப்.09 இரவில், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். இரவு சுமார் 10 மணியளவில் புளியஞ்சேரி, கொத்த கிருஷ்ணப்பள்ளி - குருபரப்பள்ளி சாலையில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி மருந்தின் டியூபை வாயில் வைத்து உரிஞ்சதால் நேர்ந்த சோகம்; விவசாயி பரிதாப பலி.!
லாரியில் மோதி பலி
அப்போது, அவரின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்றுகொண்டு இந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமணிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி செயல்.. ஓசூரில் கொடுமை.!