×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: 14 வயது சிறார்கள் கும்பலால், அக்கா-தங்கை பலாத்கார முயற்சி.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! ஐவர் கைது.!

#JustIN: 14 வயது சிறார்கள் கும்பலால், அக்கா-தங்கை பலாத்கார முயற்சி.. ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்..! ஐவர் கைது.!

Advertisement

பதின்ம வயதில் செய்யும் வேலையா இது? என பதறவைக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சிறுமிகளான இருவரும் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளனர். 

அச்சமயம் அதே பகுதியில் வசித்து வரும் 5 சிறார்கள் குழு, சிறுமியின் வீட்டிற்கு சென்று இருக்கிறது. அங்கு தனியாக இருந்த சிறுமிகளிடம் கும்பலாக சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முற்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: உறக்கத்தால் நேர்ந்த சோகம்.. லாரி ஓட்டுநர் பரிதாப பலி., 25 அடி ஆற்றில் தலைகுப்புற வாகனம்.!

பலாத்கார முயற்சி

இதனால் சிறுமிகள் அலறிய நிலையில், கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் மகள்கள் நடந்தை தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமிகளிடம விசாரணை நடத்தி 5 பேர் கும்பலை கைது செய்தனர். 

இவர்கள் ஐவரும் சிறுமி வசித்து வரும் பகுதியிலேயே இருக்கும் 14 வயதுடைய சிறார்கள் ஆவார்கள். இவர்களில் 4 பேர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பயின்று வரும் நிலையில், ஒருவர் மட்டும் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். 

இந்த ஐவர் கும்பலும் தற்போது போக்ஸோவில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளிகளின் செல்போனில் பகீர் வீடியோ.. விசாரணையில் அதிர்ச்சி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #Hosur #tamilnadu #Sexual Harassment #கிருஷ்ணகிரி #ஓசூர் #பாலியல் தொல்லை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story