×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயணிகளை ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை.. பேருந்து ஊழியர்கள் வெறிச்செயல்.!

பயணிகளை ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை.. பேருந்து ஊழியர்கள் வெறிச்செயல்.!

Advertisement

 

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 3 பேர் கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், வடமாகினா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் லத்தீப். இவர் ஆட்டோ ஓட்டுனரா வேலை பாத்து வருகிறார். சம்பவத்தன்று, வடமாகினா பேருந்து நிறுத்தத்தில் இருந்தார். ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். 

இதையும் படிங்க: 42 வயது நபருடன் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுமி.. மர்மம் விலகாமல் விழிபிதுங்கும் காவல்துறை.! பெற்றோர் கண்ணீர்.!

சுருண்டு விழுந்து மரணம்

அப்போது, அங்கு வந்த தனியார் பேருந்து ஊழியர்கள் 3 பேர், அப்துலின் ஆட்டோவை துரத்தி இடைமறித்தனர். மேலும், ஆட்டோவில் இருந்து இறங்கிய அப்துலை மூவரும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அப்துல், சுருண்டு விழுந்தார். 

ஓட்டுநர் கொலை

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அப்துலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தாக்குதல் நடத்திய முகமது நிஷாத், சுஜித், சஜூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பயணிகள் ஏற்றுவது தொடர்பாக ஆட்டோ - பேருந்துக்கு இடையே கருத்து முரண் காரணாமாக கொலை நடந்தது தெரியவந்தது. 
 

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. இருவர் பரிதாப பலி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#KERALA #Crime #Murder #Mallappuram #கொலை #ஆட்டோ ஓட்டுநர் #கேரளா #மலப்புரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story