தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகாத ஏக்கம்.. குடிக்கு அடிமையான ஓட்டுநர், தூக்கிட்டு தற்கொலை.!

திருமணமாகாத ஏக்கம்.. குடிக்கு அடிமையான ஓட்டுநர், தூக்கிட்டு தற்கொலை.!

in Kanyakumari Youth Dies by Suicide  Advertisement


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம், மருங்கூர், இரவிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள். இவரின் மனைவி நாகம்மாள். தம்பதிகளுக்கு 38 வயதுடைய மணிகண்டன் என்ற மகன், மகள் இருக்கின்றனர். 

மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை. டெம்போ ஓட்டுநராக வேலை பார்க்கும் மணிகண்டன், மதுபோதைக்கும் அடிமையாகி இருக்கிறார். 

kanyakumari

தூக்கிட்டு தற்கொலை

இதனுடன் திருமணம் ஆகவில்லையே என ஏக்கமும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மணிகண்டன் வீட்டில் தனது அறையில் உறங்க சென்றார். தாயும் அங்கு இல்லை. மாலையில் அவர் வந்து பார்த்தபோது, மகன் தூக்கில் தொங்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: ஆண்டவா என்ன கொடுமை இது? மின்சாரம் தாக்கி 4 பேர் மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: மண்ணெண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்த சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanyakumari #suicide #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story