தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லாரி - இருசக்கர வாகனம் மோதி நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!

லாரி - இருசக்கர வாகனம் மோதி நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!

in Erode Bhavani Man Died In Accident Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, ஓரிசேரிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் பாட்டப்பன் (65). இவர் அப்பக்கடல் பஞ்சாயத்தில், தற்காலிக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் ஆபரேட்டராக இருந்து வருகிறார்.

இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை சுமார் 05:30 மணிக்கு மேல், சக்தி சுகர்ஸ் காலனிக்கு தண்ணீர் திறந்துவிட சென்றார். இவரின் இருசக்கர வாகனம் தபால் அலுவலகம் அருகே சென்றது. அச்சமயம், மூங்கில் பாரம் ஏற்றிவந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

erode

இந்த விபத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாட்டப்பன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த அப்பக்கடல் காவல்துறையினர், பாட்டப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறையான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: ஈரோடு: விளையாட்டின்போது சிறுவனுக்கு பாம்பு வடிவில் வந்த எமன்; மகனை இழந்து கதறித்துடிக்கும் பெற்றோர்.!

இதையும் படிங்க: ஈரோடு: நண்பர்களின் இழப்பை தாங்க முடியாமல், 28 வயது இளைஞர் தற்கொலை.. பெற்றோர் கண்ணீர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #Bhavani #tamilnadu #accident #ஈரோடு #விபத்து #பவானி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story