தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"செத்துப்போ" - காதலன் சொன்ன ஒரே வார்த்தை.. உயிரைவிட்ட காதலி.. தாய் கண்ணீர் குமுறல்.!

செத்துப்போ - காதலன் சொன்ன ஒரே வார்த்தை.. உயிரைவிட்ட காதலி.. தாய் கண்ணீர் குமுறல்.!

in Cuddalore Panruti Young Girl Suicide  Advertisement

காதலனின் வார்த்தையால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, காடாம்புலியூர், நெல்லடிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அமுதா. வீரவன்கேணி பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. 

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: பெண்ணாடம்: கழுத்தில் கத்தி.. 16 வயது சிறுமியை நடுரோட்டில் பதறவைத்த இளைஞர்.. பரபரப்பு சம்பவம்.!

திருமணத்திற்கு தட்டிக்கழிப்பு

இதனிடையே, அமுதா தனது காதலர் அன்புவிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது, காதலன் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஒருகட்டத்தில் காதலனிடம் திருமணம் குறித்து காதலி முறையிடவே, ஆத்திரமடைந்த காதலன் திட்டி, நீ செத்துப்போ என கூறி இருக்கிறார். 

Cuddalore

காதலி தற்கொலை

இதனால் மனமுடைந்துபோன காதலி அமுதா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காடாம்புலியூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததால், அன்புவை அவர்கள் கைது செய்தனர்.

அமுதாவுக்கு சகோதரி ஒருவர் இருக்கும் நிலையில், தனக்கு ஆண் பிள்ளை இல்லையே, இருந்த இரண்டு பெண் பிள்ளையள் ஒன்றை பறிகொடுத்துவிட்டேனே என தாய் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்; திருமணமான 26 வயது நபரின் அதிர்ச்சி செயல்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Panruti #suicide #கடலூர் #பண்ரூட்டி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story