×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனின் உயிரை விட கள்ளக்காதலன் தான் முக்கியம்! தாயின் வெறிச்செயல்!

Illegal relationship

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் - வசந்தா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்களும், லால் மோகன்(13) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்ட மோகன் குடும்பத்தை விட்டு சென்றுள்ளார்.

அதனை அடுத்து தனிமையில் வசித்து வந்தார் வசந்தா. ஒரு திடிரென தனது மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் வந்து விசாரித்து அதனை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

ஆனால் லால் மோகனின் தந்தை தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அதனை அடுத்து போலீசார் வசந்தாவிடம் கடுமையான விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வசந்தா தான் பெற்ற மகன் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

அதாவது வசந்தா தனது கள்ளக்காதலன் சுபணனுடன் ஒரு நாள் இரவில் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்துள்ளான் சிறுவன் லால். அதனை அடுத்து தாய் எங்கு மகன் உண்மையை எல்லாரிடமும் கூறி விடுவானோ என்ற பயத்தில் மகனுக்கு வழுக்கட்டாயமாக தூக்க மாத்திரையை சாப்பிட கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து உண்மை வெளிவரவே வசந்தா மற்றும் சுபணனும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal relationship
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story