எப்படித்தான் மனசு வருதோ... குழந்தையை உயிருடன் புதைத்த கள்ளக்காதல் ஜோடி.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
எப்படித்தான் மனசு வருதோ... குழந்தையை உயிருடன் புதைத்த கள்ளக்காதல் ஜோடி.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
தென்காசி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள பழைய வழக்குகளை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பச்சிளம் குழந்தை குளத்து கரையில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்த சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியான சசிகுமார்- முத்துமாரி ஆகியோருக்கு தகாத உறவால் குழந்தை பிறந்தது என்றும், அவர்கள் அந்த குழந்தையை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்படையினர் கைது செய்து சேர்ந்தமரம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், முத்துமாரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த முத்துமாரிக்கு, பக்கத்துக்கு ஊரை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இவர்களது பழக்கத்தால் முத்துமாரி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில், கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த 2 பேரும் குழந்தை பிறந்த 5-வது நாளில், கொலை செய்து யாருக்கும் தெரியாமல் குளத்து கரையில் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முத்துமாரிக்கு மீண்டும் கள்ளக்காதல் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு அருகிலேயே உள்ள முட்புதர் பகுதியில் இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் மண்ணுக்குள் புதைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துமாரி, சசிகுமார் ஆகியோர் மீது மேலும் ஒரு கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362