×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காததால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

கள்ளக்காதலை கண்டித்தும் கேட்காததால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Advertisement

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் என் கே ஜி புதூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஜெய்கணேஷை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் ஜெய்கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், லாரி டிரைவர் சாமிநாதன் என்பவரின் மனைவிக்கும், இறந்த ஜெய்கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த சாமிநாதன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

இதனால், கடும் ஆத்திரத்தில் இருந்த சுவாமிநாதன் ஜெய் கணேஷை கொலை செய்ய திட்டமிட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சுவாமிநாதனை தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #madurai #illegal affair #Murder #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story