மனைவியின் நான்கு மாத பிரிவை தாங்க முடியாமல் கணவர் எடுத்த விபரீத முடிவு... திருச்சியில் பரபரப்பு.!
மனைவியின் நான்கு மாத பிரிவை தாங்க முடியாமல் கணவர் எடுத்த விபரீத முடிவு... திருச்சியில் பரபரப்பு.!
திருச்சி மாவட்டம் , ஆலத்தூரைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் வினோத் மற்றும் அவரது மனைவி இருவரும் நான்கு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362