×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தேகத்தால் மனைவியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் தப்பி ஓட்டம்... போலீசார் வலைவீச்சு...!!

சந்தேகத்தால் மனைவியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் தப்பி ஓட்டம்... போலீசார் வலைவீச்சு...!!

Advertisement

தூத்துக்குடியில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள திருமாஞ்சி நகரில் வசிப்பவர் இமானுவேல் அப்துல்லா. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கன்னித்தாய் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில், தனது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக இமானுவேல் அப்துல்லா, சந்தேகப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. அப்போது, இமானுவேல் அப்துல்லா, தனது மனைவி கன்னிதாயை ஆத்திரத்தில் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கன்னித்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி உயிரிழந்ததை அறிந்த, இமானுவேல் அப்துல்லா அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த முத்தையாபுரம் காவல்துறையினர், கொலையான கன்னிதாயின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tuticorin #Doubtful of behavior #Murder #husband escape #Woman Killed #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story