×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்!

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்!

Advertisement

திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலணி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பாலாஜி. இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் கணவன் மனைவி இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மணமுடைந்த பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvallur #Husband and wife fight #suicide #hanged
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story