ஆடு,மாடு மேய்த்து மனைவியை படிக்கவைத்த கணவர்!. படிப்பு முடிந்து மனைவி கேட்ட ஒத்த வார்த்தையால் உயிரைவிட கணவன்!.
ஆடு,மாடு மேய்த்து மனைவியை படிக்கவைத்த கணவர்!. படிப்பு முடிந்து மனைவி கேட்ட ஒத்த வார்த்தையால் உயிரைவிட கணவன்!.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கும் தர்மோனா பகுதியைச் சேர்ந்தவர் டேனியல். இவர் ஆடு,மாடு வளர்த்து அதனையே தொழிலாகவும் செய்துவந்துள்ளார். இவருக்கும் மந்தாடா பகுதியைச் பக்கத்து ஊரை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
நீண்ட நாட்கள் ஆகியும் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மனைவி படிக்க ஆசைபட்டதால், டேனியல் ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தை வைத்து மனைவியை கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்துள்ளார்.
ஷர்மிளா கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்தவுடன், நீங்கள் மாடு மேய்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்துவிட்டேன். இனி நாம் இருவருக்கும் ஒத்துப்போகாது என கூறி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஷர்மிளா அவரது அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனால் மனைவி விவகாரத்து கேட்ட அதிர்ச்சியில் விரக்தியடைந்த டேனியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து தற்கொலை செய்து உயிரை மாய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362