×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் மார்பில் கத்தியை பாய்ச்சிய கணவன்! ரத்தவெள்ளத்தில் மனைவி கவலைக்கிடம்!!

மனைவியின் மார்பில் கத்தியை பாய்ச்சிய கணவன்! ரத்தவெள்ளத்தில் மனைவி கவலைக்கிடம்!!

Advertisement

வேலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன் மற்றும் கலையரசி தம்பதியினர். இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வந்த சரவணன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தகராறு முற்றி வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை கொண்டு சரவணன் அவரது மனைவி கலையரசியை மார்பில் குத்தியுள்ளார். இதனால் அலறிய கலையரசின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனே கலையரசியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சரவணன் அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடி தலைமறைவாகியுள்ளார். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான சரவணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#husband and wife #fight #vellore #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story