தமிழகத்தையே அதிரவைத்த கொடூர சம்பவம்.! வேதனையுடன் கொடூர கணவன் அளித்த பகீர் வாக்குமூலம்!!
husband said the reason to kill wife
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள சித்தனேந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரதிதேவி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருமுனிஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக, ரதிதேவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனால் கடுமையான ஆத்திரத்தில் இருந்த குருமுனீஸ்வரன் நேற்று முன்தினம் ரதிதேவி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுதனது கைகளில் வைத்திருந்த ஹெல்மெட்டால் அவரது தலையில் கடுமையாகத் தாக்கி, மாணவர்கள் முன்பே ஸ்குரு டிரைவரால் ரவிதேவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து குருமுனீஸ்வரன் அருகிலிருந்த காவல்நிலையத்தில் தான் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இரட்டைகுழந்தைகள் உள்ளன. ஆனால் அவள் என்னுடன் சரியாக குடும்பம் நடத்தவில்லை, அடிக்கடிசண்டைபோட்டுக்கொண்டு அவளது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவாள்.
நான் சென்று திரும்ப அழைத்தால் வரமாட்டார். பிரச்சினை செய்வார். சொந்தக்காரர்களை வைத்தும் பேசி பார்த்தோம், பலமுறை கெஞ்சி கூப்பிட்டு பார்த்தோம். அனால் அவள் வரவில்லை இதனால் நான் மனம்வெறுத்துபோனேன்.
அதனால் அவள் பணிபுரியும் பள்ளிக்கு ஹெல்மட்டில் கத்தி, ஸ்குரூடிரைவர் மறைத்து எடுத்து சென்றேன். ஆனால் என்னை பார்த்ததும் அவள் ஓட முயன்றார். ஆனால் நான் ஹெல்மெட்டால் அவள் தலையில் அடித்து, கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362