×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே... மனைவியை அடித்துக் கொன்று விட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய பலே கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

அடக்கடவுளே... மனைவியை அடித்துக் கொன்று விட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய பலே கணவர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவில் தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வருபவர்கள் ரஞ்சித்குமார் - சுதாமதி தம்பதியினர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரியும் போது காதலித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் துணிகளை அயன் செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி தனது மனைவி சுதாமதி இறந்து விட்டதாக கணவர் ரஞ்சித் குமார் அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளை மேற்கொண்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுதாமதியின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சுதா மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட உடற்கூற் ஆய்வு அறிக்கையில் சுதாமதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதியானது. இதன் அடிப்படையில் மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமாரிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தனது மனைவி சுதாமதியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை தீர்த்து கட்டியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து ரஞ்சித்குமாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Suspicious behaviour #Husband murder #Wife #Chengalpattu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story