×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப்பகலில் பதற வைத்த சம்பவம்.. நடுரோட்டில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

பட்டப்பகலில் பதற வைத்த சம்பவம்.. நடுரோட்டில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

Advertisement

தூத்துக்குடி அருகே உள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும், மீனா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், 3 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களாக ராஜ்குமாருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிக்கு வந்த கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராம்குமார் மீனாவை தாக்க முயன்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த மீனா வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். ஆனாலும் அவரை பின்தொடர்ந்து சென்ற ராம்குமார் மீனாவை அறிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே ராம்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tuticorin #Arampannai #Crime #husband killed wife #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story