×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அண்ணன் மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்! கணவனை கண்டித்த மனைவிக்கு இறுதியில் நேர்ந்த பரிதாபம்.

Husband killed wife for illegal relationship with brother wife

Advertisement

வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை என்னும் பகுதியை அடுத்து அமைந்துள்ள ரங்கசமுத்திரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் அரசு ஊழியர் லட்சுமணன். இவரது மகன் குமரேசன்(28) என்பவருக்கும், புதூர் பகுதியை சேர்ந்த நதியா(24) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் குமரேசனுக்கும், தனது வீட்டின் அருகில் வசித்துவந்த தனது அண்ணன் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த நதியா தனது கணவரிடம் பலமுறை எச்சரித்துள்ளார்.

மனைவியின் கண்டிப்பை கண்டுகொள்ளாத குமரேசன் மீண்டும் மீண்டும் தனது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் மனம் நொந்த நதியா இதுபற்றி தனது தாயிடம் கூற அவரும் தனது மருமகனிடம் எடுத்து கூறியுள்ளார். அவர் கூறியும் குமரேசன் கேட்பதாக இல்லை.

இந்நிலையில் கூலி வேலைக்காக குமரேசனும், நதியாவும் திருப்பத்தூருக்கு வந்துள்ளனர்.   தனியாக வந்த நதியாவை கேட்க ஆள் இல்லை என்பதால் குமரேசன் அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதில், இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் குமரேசன் நதியாவை பலமாக தாக்கியதில் அவர் உயிர் இழந்துவிட்டார்.

மனைவி இறந்ததை அறிந்த குமரேசன் அவரது உடலை தூக்கி அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, மாடு முட்டி அவர் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். இதனை நம்பாத நதியாவின் தாய் நடந்த சம்பவம் பற்றி காவல் துறையிடம் கூற அவர்களது விசாரணையில் மனைவியை கொலை செய்ததை குமரேசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story