×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதை செஞ்சுட்டு அவளோட போ! கோபத்தில் மனைவி கூறியதை அப்படியே செய்த கணவன்! அம்பலமான பகீர் உண்மை!

husband killed wife for illegal affairs

Advertisement

சென்னை மதுரவாயலில் வசித்து வருபவர் ஜெயவேல். இவரது மனைவி திலகம். இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திலகம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், தான் புதிதாக வாஷிங்மெஷின் ஒன்றை வாங்கி வந்தேன். ஆனால் அது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை.இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு மனமுடைந்த திலகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஜெயவேல் கூறியுள்ளார்.

ஆனால் திலகத்தின் கழுத்திலும் முகத்திலும் காயங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜெயவேல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் இறுதியாக தான்தான் மனைவியை கொன்றேன் என உண்மையை ஒப்புக்கொண்டார்.

மேலும் இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, திலகத்தின் தோழியுடன் ஜெயவேலுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தனது மினி லாரியில் திலகத்தின் பெயருடன் அந்தப் பெண்ணின் பெயரையும் எழுதி வைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த திலகம், என்னை கொன்றுவிட்டு, அவளோடு போய் சந்தோஷமாக இரு என கூறியுள்ளார்.

 இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயவேல் மதுபோதையில் வீட்டிற்கு திரும்பி, தனது மனைவியின் கழுத்தை நெரித்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் திலகம் தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #illegal affairs #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story