தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை அழைத்து வந்து, துடிதுடிக்க கணவர் அரங்கேற்றிய கொடூரம்! வெளியான பகீர் காரணம்!
Husband killed second wife for doubting
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். 31 வயது நிறைந்த இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பவித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒரு வருடத்திலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை வந்தநிலையில் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சார்லஸ் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரமணி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸை விட ரமணிக்கு 4 வயது அதிகம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான ரமணிக்கு திடீரென கருகலைந்தது. மேலும் கொரோனா பிரச்சனையால் சார்லஸ்க்கும் வேலையும் போனது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் ரமணிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சமீபத்திலும் இருவருக்குமிடையே சண்டை வந்தநிலையில் ரமணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மிகுந்த கோபத்தில் இருந்த சார்லஸ் தனது மனைவியை நடித்து சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து சார்லஸ் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டநிலையில், ரமணிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக சார்லஸ் சந்தேகப்பட்டதாகவும், இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து அவர் மனைவியை கொன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362