×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்போதும் பிசி பிசி என வந்த மனைவியின் செல்போன்... ஊருக்கு வந்ததும் கணவர் செய்த செயல்... கதறும் குடும்பத்தினர்!!

எப்போதும் பிசி பிசி என வந்த மனைவியின் செல்போன்... ஊருக்கு வந்ததும் கணவர் செய்த செயல்... கதறும் குடும்பத்தினர்!!

Advertisement

தேனி மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் - பிரியங்கா தம்பதியினர். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வருடத்திற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.

ஆனால் தினமும் காலை, மாலை என இரண்டு நேரம் மனைவியுடன் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மனைவியின் செல்போனை தொடர்பு கொள்ளும் போதெல்லாம் பிசி பிசி என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த மகாராஜன் இது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரியங்கா தனது தோழியிடம் பேசியதாக கூறியுள்ளார். 

இருப்பினும் மகாராஜனுக்கு மனைவி மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஊருக்கு வந்த மகாராஜன் மனைவியிடம் தனது சந்தேகத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மகாராஜன் பிரியங்காவை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். அதில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து போலீசாரிடம் கூறி சரணடைந்துள்ளார் மகாராஜன். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thani district #Husband Wife #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story