×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன் மனைவி அழகாக இருப்பதால் ஏற்பட்ட சந்தேகம்.! கணவன் செய்த கொடூர செயல்.!


புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வர

Advertisement


புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தன் மனைவி அழகாக இருப்பதால் அவர் தன்னை விரும்பவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையில் அவரது மனைவி நடத்தையில் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரதிகலா நடத்தையில் பாபுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் சம்பவத்தன்று காலையும் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கோபமடைந்த பாபு தன்னுடைய மனைவி ரதிகலா தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த ரதிகலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரதிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கைது செய்த போலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Husband #Wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story