தன் மனைவி அழகாக இருப்பதால் ஏற்பட்ட சந்தேகம்.! கணவன் செய்த கொடூர செயல்.!
புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வர
புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செய்து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தன் மனைவி அழகாக இருப்பதால் அவர் தன்னை விரும்பவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையில் அவரது மனைவி நடத்தையில் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரதிகலா நடத்தையில் பாபுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் சம்பவத்தன்று காலையும் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கோபமடைந்த பாபு தன்னுடைய மனைவி ரதிகலா தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த ரதிகலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362