×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பலமுறை அழைத்தேன் வரவில்லை! தூக்கில் தொங்கிய கணவன்! சிக்கிய உருக்கமான கடிதம்!

Husband commit suicide for family issue

Advertisement

திருச்சி அரியமங்கலம் அருகே  காமராஜ் நகரில் வசித்து வந்தவர் பிரபு. இவர் மிட்டாய் கடை வைத்துள்ளார். இவருக்கு தாமினி  என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 7 மாத ஆண்குழந்தை ஒன்று ஒன்றுள்ளது. இந்நிலையில்  கடையில் சரியாக வருமானம் இல்லாததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தாமினி கணவரிடம் கோபித்துக்கொண்டு, குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.மேலும்  பிரபு பலமுறை தனது மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே பிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் பிரபு  அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்நிலையில் பிரபு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.  அதில், திருமணமான சில நாட்களிலேயே பெண் வீட்டாரால் என் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் வந்தது.மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட என் மனைவி அடிக்கடி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார். அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் கோழை இல்ல. அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பிரபுவின் மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி, அவரது தங்கை தனலெட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #suicide #family issue
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story