×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்.! தடுக்க வந்த சித்திமகனையும் விட்டுவைக்காத கணவன்.!

மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்.! தடுக்க வந்த சித்திமகனையும் விட்டுவைக்காத கணவன்.!

Advertisement


கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் கோவையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 8 வயதில் மகன் உள்ளான். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனகாரணமாகி திவ்யா அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு திருப்பூரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல கணவன் மனைவிக்கு இடையே தகராறு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா திருப்பூரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு வந்து விட்டார். 

இந்தநிலையில், பவுன்ராஜ் நேற்று அவரது சித்தி வீட்டிற்கு வந்து அங்கிருந்த திவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தான் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாளால் திவ்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைப்பார்த்து தடுக்கவந்த திவ்யாவின் சித்தி மகனையும் பவுன்ராஜ் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த திவ்யா மற்றும் அவரது சித்தி மகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பவுன்ராஜை கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Husband #Wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story