×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டாவில் கள்ளக்காதல்.. கத்தியை எடுத்து பாய்ந்த கணவனால் பரபரப்பு சம்பவம்.. கதறலோ கதறல்..!

இன்ஸ்டாவில் கள்ளக்காதல்.. கத்தியை எடுத்து பாய்ந்த கணவனால் பரபரப்பு சம்பவம்.. கதறலோ கதறல்..!

Advertisement

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மனைவிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதால், கோபமுற்ற கணவன் இருவரையும் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் அயனாவரம் பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்கள் பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் நிலையில், சுவாதிக்கு கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த சத்தியகண்ணன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இருவரும் ஊருக்குள் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். இது கணவருக்கு தெரிய வர, இருவரையும் அவர் கண்காணிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 11:30 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுவாதியும், சத்திகண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர்.

இதனைக்கண்ட ராஜேஷ் ஆத்திரமடைந்து, அங்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இவர்களுக்குள் சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவியையும், கள்ளக்காதலனையும் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.அத்துடன் இருவரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த நிலையில் கிடந்தபோது, இதனைகண்டு பயந்துபோன பயணிகள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த கோயம்பேடு காவல்துறையினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சுவாதி மற்றும் சத்திய கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவர் ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Patinapakam #Husband #attack #illegal relationship
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story