×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தேக புத்தியால் நேர்ந்த விபரீதம்: மனைவிக்கு அரிவாள் வெட்டு!. கணவன் கைது..!

சந்தேக புத்தியால் நேர்ந்த விபரீதம்: மனைவிக்கு அரிவாள் வெட்டு!. கணவன் கைது..!

Advertisement

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவெளி மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் கண்ணன் (51). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (41). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். காலையில் வேலைக்கு செல்லும் வசந்தி, இரவு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு தம்பதியினர் இருவகுக்கும் இடையே செல்ஃபோனில் அதிக நேரம் பேசுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் வசந்தி கோபித்து கொண்டு, தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு ஊர் பெரியவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய வசந்தி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து மீண்டும் அதிக நேரம் போனில் பேசியதாக சந்தேகமடைந்த கண்ணன் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய வந்த வசந்தியிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த கண்ணன் அரிவாளால் வசந்தியை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

வசந்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த, அக்கம் பக்கத்தினர் அவரைமீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆத்தூர் காவல்துறையினர், கண்ணனை கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tuticorin District #Husband Arrest #Stabbed Wife #police investigation #Woman Injured
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story