கணவருடன் தூக்கில் தொங்கிய 8 மாத கர்ப்பிணி பெண்.! கடிதத்தில் பரபரப்பு தகவல்.!
தமிழகத்தில் கணவருடன் சேர்ந்து 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கவிதா என்ற பெண்ணிற்கும் இரண்டு வருடங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் கவிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
பாலமுருகனின் சகோதரர் கார்த்தி என்பவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கார்த்தி நேற்று முன்தினம் இரவு அவரது சகோதரர் பாலமுருகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் நேற்று காலை பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.
ஆனால், பாலமுருகனின் வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதனால் கதவை கார்த்திகேயன் வேகமாக தள்ளி திறந்து பார்த்த போது, பாலமுருகன் - கவிதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றினர்.
போலீசார் பாலமுருகனின் வீட்டை சோதனை செய்தபோது பாலமுருகன் - கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. இந்த முடிவை நாங்களே எடுத்துக்கொண்டோம். அம்மா, அப்பா எங்களை மன்னித்து கொள்ளுங்கள். உண்டியல் பணத்தை அண்ணனிடம் கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362