×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தந்தை வீட்டிற்கு வந்த மகள்.! பெற்றோர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.! தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை.!!

தந்தை வீட்டிற்கு வந்த மகள்.! பெற்றோர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.! தாய்-தந்தை விஷம் குடித்து தற்கொலை.!!

Advertisement

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்-பாரதி தம்பதிக்கு தினேஷ் என்ற மகனும், பாக்யலட்சுமி என்ற மகளும் உள்ளனர். பெற்றோருடன் வசித்து வந்த தினேஷ், கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தரகராக வேலை செய்து வந்துள்ளார். கோவிந்தராஜின் மகள் பாக்யலட்சுமிக்கு திருமணமாகி குடும்பத்துடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், பாக்யலட்சுமி தனது மகளை, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக கடந்த வாரம் குடும்பத்துடன் தந்தை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். மகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு பாக்யலட்சுமி, தனது பெற்றோரிடம் பணம் கேட்டார். அப்போது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அனைவரும் சென்று தூங்கி விட்டனர். ஆனால் விரக்தி அடைந்த கோவிந்தராஜ், அவருடைய மனைவி பாரதி இருவரு நள்ளிரவில் விஷம் குடித்து தங்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் அதிகாலையில் இருவரும் படுக்கை அறையில் பிணமாக கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையோ மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Wife #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story