துக்க நிகழ்வுக்கு சென்ற தம்பதி துடிதுடித்து மரணம்.! அதிர்ச்சி சம்பவம்.!
இருசக்கர வாகனத்தில் துக்க நிகழ்வுக்கு சென்ற தம்பதி மீது கார் மோதியதில் தம்பதி பலி.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதுரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் அவரது மனைவியுடன், திருமயம் அருகே அவர்களது துறவினரின் துக்க நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில்சென்றுள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபொழுது, காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
கார் வேகமாக மோதியதில் பழனிச்சாமி, அவரது மனைவி மல்லிகா இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க வீட்டுக்கு சென்ற தம்பதி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362