இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்-மனைவி.! 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து ஏற்பட்ட பரிதாபம்.!
இருசக்கர வாகனத்தில் சென்றபோது சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி. 53 வயது நிரம்பிய இவர், சென்னை விமான நிலையத்தில் சுங்க துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உஷா (வயது 45) என்ற மனைவி உள்ளார். கணவன்-மனைவி இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் புரசைவாக்கம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர்.
இவர்கள் இருவரும் பெரம்பூர் ஜமாலியா பகுதியில் இருந்து மூலக்கடை வழியாக மாதவரம் செல்வதற்காக பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் மேலே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முரசொலிமாறன் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென பாலத்தின் வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதி கணவன், மனைவி இருவரும் மேம்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு நடந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து தம்பதி கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362