×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய மனைவி... ஓடி சென்று காப்பற்ற முயன்ற கணவர்.... பின்னர் நிகழ்ந்த சோகம்!!

தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய மனைவி... ஓடி சென்று காப்பற்ற முயன்ற கணவர்.... பின்னர் நிகழ்ந்த சோகம்!!

Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் லுக்மான் ஹக்கீம் - சகர்பானு தம்பதியினர். ஹக்கீம் பழைய பேப்பர்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக ஹக்கீம் குடும்பத்துடன் நெல்லை மேலப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு ஹக்கீம் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேருடன் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது சகர்பானு எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார்.

இதனை பார்த்த ஹக்கீம் உடனே மனைவியை காப்பாற்ற விரைந்து ஆற்றின் உள்ளே சென்றுள்ளார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன்-மனைவி 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் தீயணைப்பு வீரர்கள் ஹக்கீமின் உடலை மட்டும் சடலமாக மீட்டுள்ளனர். சகர்பானு உடலை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சகர்பானு உடலை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#husband and wife #Death drowned #Thamiraparani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story