×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே! தற்கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. போலீஸ் விசாரணை..!

அடக்கொடுமையே! தற்கொலையில் முடிந்த குடும்ப தகராறு.. போலீஸ் விசாரணை..!

Advertisement

ஈரோடு மாவட்டம் சாய்ம்பு தோட்டம் பகுதியில் வசித்து வருபவர்கள் தாண்டவன் -சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தாண்டவம் குதிரைகள்மேடு கதவனை மின் நிலையத்தில் மின்சாரத் துறையில் ஒயர் மேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாண்டவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தாண்டவம் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.

​​​​​

இதனால் ஆத்திரமடைந்த தாண்டவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் தாண்டவன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Family Dispute #Sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story